Tuesday, February 26, 2013

வெளியில் தெரியாத கற்கள்

லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமராக இருந்த போது, ஒருநாள் சில பத்திரிகை நிருபர்கள் அவரைப் பேட்டி எடுக்கவும் புகைப்படம் எடுத்துப் பத்திரிகையில் பிரசுரிக்கவும் விரும்பினர். ஆனால் அவர் அதற்கான அனுமதி தரவில்லை.

"ஏன்?" என்று அவரது உதவியாளர் கேட்டார். அதற்கு சாஸ்திரி, "தாஜ் மஹால் உருவாகுவதற்கு இரண்டு வகைக் கற்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்று கட்டடத் திற்கு அடித்தளமாகப் பயன்பட்ட பாறாங்கற்கள். மற்றொன்று அழகிற்காகப் பயன்பட்ட சலவைக் கற்கள். அவற்றில் பாறாங் கற்கள் தான் அந்தக் கட்டடத்தைத் தாங்கிக் கொண்டிருக்கின்றான். ஆனால் அவை வெளியில் தெரிவதில்லை. ஒரு மனிதன் எவ்வளவுதான் புகழ் பெற்றிருந்தாலும், வெளியில் தெரியாத அந்தப் பாறாங்கற்களைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று என் ஆசிரியர் சொல்லுவார். அதைத்தான் நான்
... கடைப்பிடிக்கிறேன். ஆகவே எனக்கு எந்த விளம்பரமும் வேண்டாம் !" என்றார்.

அதைக் கேட்ட உதவியாளர் அசந்துபோனார்.........

No comments:

Post a Comment